சௌராஷ்டிராவில் ஒரு சிறிய கிராமத்தில் ரயில் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் ஒரு சிறுவன் தனது குடும்பத்தோடு ஜெய் மா காளி என்ற அம்மன் திரைபடத்திற்கு முதல்முறையாக செல்கிறான் . அப்பாவோ கண்டிப்புடன் சொல்கிறார் இதுதான் உன் வாழ்க்கையில் நீ பார்க்கும் முதல் படம் மற்றும் இறுதி படமும் கூட . ஆனால் அவனுக்கோ வருகின்ற அத்தனை சினிமாவையும் அந்த திரையரங்கில் காண வேண்டும் என்பதுதான் ஆசை . தந்தையிடம் சினிமா பார்க்க பணம் கேட்டா . பிரம்பால் அடி தான் ரயில் நிலையத்தில் டீ கடை வியாபாரம் செய்யும் தந்தைக்கு அவ்வப்போது உதவி செய்கிறார் சிறுவன் . பள்ளிக்கு செல்கிறேன் என்னும் பெயரில் .
இப்படியே பல படங்களை பார்த்து கொண்டிருக்கும் சிறுவன் . ஒருகட்டத்தில் எப்படி சினிமா இதில் வருகிறது என கேள்வி கேற்கிறான் . அதே போல எப்படி சினிமா எடுக்கிறார்கள் எனவும் கேற்கிறான் . அவனுக்குள்ளே இதுபோல ஒரு சினிமாவை திரையை உருவாக்கிட ஒரு சிறிய ஆசை உருவாகிறது . அதற்க்கு பிறகு என்ன ஆகிறது என்பதுதான் இந்தப்படம் . இயக்குனரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களையும் உலக சிறந்த சினிமா பாரடிஸோ படத்தையும் சேர்த்து படமாக்கி இருக்கிறார்கள் .
சினிமா என்னும் மாய உலகம் ஒவ்வொருவருக்கும் அவரரர் தனிப்பட்ட விருப்ப அடிப்படை ரசனை சார்ந்த தேர்வுகள் இருக்கும் , அப்படிப்பட்ட அழகிய சினிமாக்கள் இவ்வுலகில் ஏராளம் . நமக்கு தெரியாத காணாத எத்தனையோ விஷயங்களை சினிமா நமக்கு காட்டியிருக்கிறது . சினிமா பிடிக்காதவர் என யாரையும் இதுவரை நான் கண்டதில்லை, நல்ல நல்ல சினிமாக்களை நேசிப்போம் . அப்படி சினிமாவை நேசிப்பவர்களுக்கானது தான் இந்தப்படம் .
சினிமாவை உருவாக்கிய , அந்த சினிமாவை தான் பார்த்து ரசிக்க உதவிய அதி அற்புதமான படங்களை இயக்கிய இயக்குனர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு அழகான பெயர் பட்டியிலை இறுதியில் சொல்கிறார் இயக்குனர் . உண்மையிலேயே அவர்களுக்கு அர்பணிப்பாக்கும் இந்த அருமையான படத்தை கொடுத்திருக்கிறார் . சினிமா பாரடைசோ வில் பார்த்த ஒருசில காட்சிகள் அப்படியே கண்முன்னே வந்து போகும் . அவரின் அந்த படத்தின் மூலம் தீவிரமாக ஈர்க்கப்பட்டுள்ளார் என்பது புரிகிறது .
சிறுவன் இந்த சினிமா எப்படி வருதுன்னு கேட்டதற்கு ஆப்பரேட்டர் சொல்லும் சில பதில் .
சினிமாவா ? அவங்க கதையை சொல்றாங்க .. வாக்காளர்கிட்ட ஓட்டு வாங்க அரசியல்வாதி கதை சொல்றமாதிரி , வியாபாரி தன்னோட பொருள்களை சாமர்த்தியமான முறையில வாடிக்கையாளர்க்கிட்ட கதையை சொல்லி விற்கிற மாதிரி . ஒரு கதையை சொல்லணும் அதுவும் பொய்யா சொல்லணும் என்கிறார் . இந்த எதிர் காலமே கதை சொல்றனவனை நம்பித்தான் இருக்கு . குறிப்பா பொய் சொல்லணும் ன்னு சொல்றார் . பொய்யா அப்படின்னா அதுல நான்தான் சிறந்தவன்ன்னு சொல்றான் பைய்யன் . வரும்காலங்களில் நல்ல நல்ல படங்களில் சிறுவன் வருவான் என நினைக்கிறேன் .
ஒரு இனிமையான இயல்பான பீல் குட் ட்ராமாவை போலத்தான் இந்தப்படம். ஒருவரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதல்ல . நம் ஒவ்வொருவருக்கும் இதுபோல நிச்சயம் எதாவது ஒரு தொடர்பு இருக்கும் . 9 வயது சிறுவன் அவ்வளவு இயல்பாக நடித்திருப்பது ஆச்சர்யம் . இது சினிமா ப்ரியர்களுக்கான படம் , ஒருமுறை பார்க்கலாம் .
இந்தியாவில் தற்போது எந்த OTT யிலும் வெளியாகவில்லை . வெளியானால் குறிப்பிடுகிறேன் . அப்பொழுது பார்க்க விரும்புவோர் பார்த்துக்கொள்ளலாம் .
நன்றி
إرسال تعليق